வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஓசை டு இசை

பால்ய வயதில் என்வாழ்வில் செவிவழி நுழைந்து இன்று என் எந்தநாளும் உன் இசை கேட்காமல் கடந்ததில்லை.
எப்போது உன் இரசிகனானேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதை எவ்வளவு யோசித்தாலும் சரியாக நினைவுக்கு வருவதில்லை.
நான்கு வயது இருக்கும்போதே நான் இரசித்ததெல்லாம் பின்னாளில் உங்கள் இசை என்று புரிந்து உள்ளம் பரவசம் அடைந்தேன்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,சிப்பி இருக்குது முத்தும் இருக்குது,உனக்கென்ன மேலே நின்றாய்,கம்பன் ஏமாந்தான்,ராகங்கள் பதினாறு போன்ற காலத்தால் அழியா பாடல்கள் சிறு வயதிலேயே என்மனதில் உறைந்துவிட்டன.
மெல்லிசை மன்னனே, உங்கள் தோளில் ஏறி நின்றுதான் ராஜாவையும்,ரகுமானையும் ரசிக்க முடிகிறது. அவர்கள் இசையை என் உள்ளம் ரசிக்கும் வேளையில், உங்கள் இசை என் உயிர் கலந்தது.

உங்கள் இசையில் உருவான பல பாடல்கள் என்றென்றும் அழியாத காவியங்கள் போல் மனதை மயக்கும் வகையில் அமைந்தன. மயக்கும் மாலைப்பொழுதே, செந்தமிழ் தேன்மொழியாள், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், பாலிருக்கும் பழமிருக்கும், அத்தான் என்னத்தான், ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி, காலங்களில் அவள் வசந்தம், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்தும் மலராத, நான் பேச நினைப்பதெல்லாம், எங்கிருந்தாலும் வாழ்க, கொடி அசைந்ததும் காற்று வந்ததா, ரோஜா மலரே, அன்று வந்ததும் அதே நிலா, அத்தை மடி மெத்தையடி, பேசுவது கிளியா, அமைதியான நதியினிலே, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, ஒளிமயமான எதிர்காலம், அதோ அந்த பறவை போல, பார்த்த ஞாபகம் இல்லையோ, தொட்டால் பூ மலரும், தமிழுக்கும் அமுதென்று, உன்னை நான் சந்தித்தேன், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், பூ முடிப்பாள் இந்த பூங்குழலி, விண்ணோடும் முகிலோடும் என எத்தனையோ இசை ஓவியங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
மெல்லிசை மன்னரே, உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக