புதன், 31 ஜூலை, 2019

சரஸ்வதி கடாட்சம்

 ஜெ வின்  அறம் கதையில் செட்டியார் ஆச்சியின் கூற்றாக ஒரு அற்புதமான வாக்கியம் இருக்கிறது.இலக்கிய வாசகனாக, மனம் சலிக்கும் போது புதிய குதூகல ஊற்றை பொங்கச் செய்யும் மகா மந்திரம் அது.
"லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க…"
        அப்படி ஏழேழு ஜென்மம் கண்டு , இந்தப் பிறவியில் அவளை ஆராதிக்கும் உள்ளம் வாய்த்மைக்காக மாதங்கியை வணங்கி மகிழ்கிறேன்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை
அறியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய்
                                                      -கவி காளமேகம்
மேலும் பல வழிகளில் அவளை  உபாசிக்க எண்ணிய வேளையில்,நண்பர்கள் இந்த புதிய வழியைக் கண்டுள்ளார்கள்.அவர்களுக்கு நன்றி.
https://prabhumayiladuthurai.blogspot.com/2019/08/blog-post.html