செவ்வாய், 14 ஜூலை, 2020

ஏன் இப்படி?பகுதி 1

பகவான் ரமணரின் தத்துவ விசாரம் இப்படித் தொடங்குகிறது.நான் யார் இதுவா நேதி நேதி இப்படி ....
அதனை செய்ய அவரைப்போல் திடசித்தம் வேண்டும்.சரி...
நம்மைப் போன்ற வாழ்வியல் முறை கொண்டவர்கள் எவ்வாறு தத்துவ விசாரம் செய்ய இயலும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏன்  தத்துவ விசாரம் செய்ய வேண்டும்?
இப்படியே மகிழ்ந்து குலாவி வாழ்ந்து முடிந்தால் என்ன என்பவர்கள் அகலலாம்.
வாழ்வின் அடிப்படை வினாக்களைப் பற்றிய தேடல் மனதில் எழுந்தால் மட்டுமே பதிலைத் தேடும் முயற்சிக்கு இப்பதிவு உதவக்கூடும்.
சரி வாழ்வின் அடிப்படை வினாக்கள் என்ன சார்...
முதலில் நம்முள்
       ஏன் பிறந்தோம்,என்ன செய்கிறோம்,இதுதான் வாழ்வா,ஏன் எனக்கு மட்டும் இவை நிகழ்கிறது,ஏன் மரணம் ஏற்படுகிறது,அதற்குப் பிறகு....
இரண்டாவது வெளியில்
       இந்த பூமி எப்படித் தோன்றியது,நம்மில் சூரியன்,சந்திரன் பங்கு என்ன,பிரபஞ்சம் என்றால் என்ன இதுபோன்ற சந்தேகங்கள்
    இந்த சஞ்சலங்களுக்கு இளமையில் பல மதங்கள் பல வழிகள் காட்டும்.குழப்பமாக   இருக்கும்.பல மாஸ்டர்களின் நூல்கள் அறிமுகமாகும்.நம் குடும்பத்தில் உள்ள மரபுகள் பழையனவாகவும்,மற்ற மதங்கள் புதியனவாகவும் காட்சி தரும்.அவ்வாறு இன்னாட்டிலாவது சூழல்களை அமைத்திருக்கிறார்கள் மிஷனரிகள்.அவர்கள் நரிகள்தான் இல்லையா.
   இங்கேதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சற்று பிசகினால் நீங்கள் திசை மாறி விடுவீர்கள்.ஆமாம்.
  அப்படி மாறாமல் முப்பத்தி ஐந்து வரை வந்து விட்டீர்கள் எனில் மீண்டுவிடலாம்.இனிதான் நம் மரபின் மேன்மை உணர எவ்வாறு அது கட்டப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
வெளியில் உள்ள கவன ஈர்ப்புகள் குறைந்திருக்கும்.ஓரளவு பெண்ணின்பம் கண்டுணர்ந்து அப்புறம் என்ன என்று நிற்கும்போதுதான் இப்பதிவு ஓரளவு உதவக்கூடும்.
   அதற்கு முன் உடல்,மனம்,அறிவு,உள்ளம் மற்றும் இவை எப்படித் தனியாகவும்,இணைந்தும் செயல்படுகிறது என்பதின் அர்த்தத்தை நாமாகவே சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும்.எளிதுதானே.
   இத்தகைய உள்ளத்திற்கும் வெளியில் உள்ள சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளையும் அறிய வேண்டும்.
சமூக நிகழ்வுகள் நம் உள்ளத்தையும்,உள்ளம் சமூகத்தில் நம் நடத்தையையும் எவ்வாறு மாற்றுகின்றது என்பதையும் கவனித்து வரவேண்டும்.
     எனவே சமூகம் நம் உள்ளத்தை பாதிக்க விடக்கூடாது.நம் உள்ளம் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுத்து,பின்னர் தன் இயல்பு நிலைக்கு மீள வேண்டும்.
  சரி இந்த இயல்பு நிலை என்பது என்ன.தனக்கு  உரிமையுள்ள மங்கையை,அச்சமின்றியும்,பரஸ்பர விருப்பத்துடனும் கண்டு,விண்டு,உண்டு  முக்கோணத்தின் உச்சி,பின்னர் இறக்கம் கொண்டு கிடக்கும்போது இனிய அயர்ச்சி ஏற்படுகிறது  அல்லவா.அந்த மனநிலை இருக்கில்லையா...அதான் இயல்பு நிலை.
  முக்கியமாக சமூகத்தில் நாம் ஆல்ஃபா,பீட்டா,காமா எப்படி இருந்தாலும் அது பொருட்டில்லை.சரி.இப்போ இயல்புநிலை கொஞ்ச காலம் பழக வேண்டும்.
    அடுத்து என்னவென்றால் நம் குடும்பம்,மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறந்தார்களின் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள செயல்களை செய்யவேண்டும்.இது அடிப்படையானது.
  பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அதற்கேற்றவாறு வசிக்க வேண்டும்.
நாம் முற்றுன்மையை அடைய நம் மரபிலேயே வழி உள்ளது.



 ,