வெள்ளி, 5 ஏப்ரல், 2019

குயில் பாட்டு

குயிலின் குரலைப் பற்றி எத்தனை எத்தனை திரைப்பாடல்கள்,சொல்லாட்சிகள்,பழமொழிகள்.....உடனே நினைவுக்கு வரும்.ஆனால் குயிலைக் கண்டதுண்டா? சமீப காலம் வரை செம்போத்துதான் குயில் என்று நினைத்திருந்தேன்..
ஆனால் குயில்களில் ஆண்,பெண் வேறுபாடு உண்டு.பெண்குயில் வெண்மை நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும்.கூவாது.குழறும்.மிக எளிதாக அதனைக்காணலாம்.கண்டிருக்கிறேன்.
 நாம் கேட்பதெல்லாம் ஆணின் ஏக்கமும்,சோகமும் கொண்ட கீதத்தையே... அது ரொம்ப கூச்சம் கொண்ட பறவை.புதருக்குள்ளேதான் இருக்கும். வெயில் பிடிக்காது.அதுக்கு உணவும் இலைகளுக்குள்ளேயே(கொட்டைகள் பழங்கள்)கிடைப்பதால் காண்பது கடினம்.
மழைக்காலத்திலேயும் குயில் கூவும் ”கோடைகாலத்திலே குயில் அதிகமாக்கூவும்.இப்பதான் குயிலுக்கு இனப்பெருக்க காலம்… மார்ச் முதல் ஆகஸ்ட் வரை… Eudynamys scolopacea!?(எப்பிடி படிக்கிறது) என்ற பறவையியல்பெயர் கோண்ட குயில் Asian Koel என்று அழைக்கப்படுகிறது.

 இத்தகையதொரு பறவையைக்காண நான் அலையாத இடமில்லை,ஆனால் காண முடியவில்லை.
கடந்த எட்டாம் தேதி காலை எட்டு மணி.பாண்டி கம்பன் கலையரங்கம் உள்ளே சென்றபோது குயிலின் கானம் செவியில் இனிக்க,மேலே அண்ணாந்த போது அங்குள்ள இலவமரத்தில் ஆண்குயில் இருந்து…கூவிக்கொண்டிருந்தது தெளிவில்லாமல்...எனக்குப்பதற்றம்....பறந்துவிடாது இருக்க வேண்டுமே..மங்கலாக.....நன்றாகப் பார்க்கவேண்டும்...பிபி எகிற...உற்ற நண்பன் நிக்கானை எடுத்து ஜூம் செய்ய... கொஞ்சநேரம் ஒன்றும் தெரியவில்லை...பிறகு வியு பைன்டரில் மெல்ல துலங்கி வந்தது. கருப்பு வண்ண முதுகு.ரத்தச்சிவப்புக் கண்கள். மஞ்சள் அலகு. ஆசம்...பரவசம்.பாடும்போது குயிலை நான் பார்ப்பது முப்பத்தி எட்டு வயதில் இதுவே முதல்முறை.வாழ்க்கையின் சிறந்த தரிசனம்.ஆனால் அந்தக்குயில் என்னைப் பார்த்ததா?Who knows….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக