வெள்ளி, 5 ஏப்ரல், 2019

துப்பறியும் நாவல்கள் 1

1980ற்கு முன்னும் பின்னும் பிறந்தவர்களுக்கு துப்பறியும் நாவல்களைப்பற்றி சொல்லவேண்டியதில்லை.கொலை,கொள்ளை,கடத்தல், பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் நாவல்கள்.
அவை பால்ய வயதில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.அதவும் தமிழ்வாணனின் கதைகள் வாசிப்பதற்கு கல்கண்டு.அவர் நடத்திய வார இதழும் அதுவே.
சுஜாதா,ராஜேஷ் குமார், ராஜேஞ்திர குமார், புஷ்பா தங்க துரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா போன்றோரின் துப்பறியும் கதைகளுக்கு ஒரு வகையில் தமிழ்வாணன் முன்னோடி. 
 தமிழ்வாணன் கல்கண்டு இதழில் துப்பறியும் நாவல்கள் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். அவர் உருவாக்கிய துப்பறியும் பாத்திரம் சங்கர்லால் என்பது அனைவரும் அறிந்ததே.சங்கர்லால் கதைகளால் கவரப்பட்டவர்களுள் அடியேனும் ஒருவன். எங்கள் ஊர் நூலகத்தில் நான் எடுத்துப் படித்தவை பெரும்பாலும் தமிழ்வாணன் மர்ம நாவல்கள்.
தேநீர் பிரியரான சங்கர்லால் எப்போதும் தேநீர் அருந்திக்கொண்டேதான் இருப்பார்.. சங்கர்லால் தன்னுடைய காலை மேசைமேல் குறுக்காக வைத்துக்கொண்டு தேநீர் அருந்தும் ஸ்டைல் சித்திரமாக மனதில் உள்ளது.
தமிழ்வாணன் சங்கர்லாலை நாயகனாக வைத்து மொத்தம் 23 நாவல்களை எழுதினார். இருண்ட இரவுகள்,ஹலோ சங்கர்லால், சங்கர்லால் வந்துவிட்டார், சங்கர்லால் துப்பறிகிறார், பாரிசில் சங்கர்லால், நியூயார்க்கில் சங்கர்லால்,இன்னொரு செருப்பு எங்கே?,மர்மத்தீவு,ஆந்தை விழிகள் போன்ற படைப்புகளை மறக்க முடியுமா...
அழகிய தமிழில் எழுதிய, தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த
சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்களை மணிமேகலைப் பிரசுரத்தினர் பெரிய நூலாக,ஆறு பாகங்களாக அட்டகாசமான வடிவமைப்பில். வெளியிட்டிருக்கிறார்கள்.நாஸ்டால்ஜியா உணர்வு வேண்டுமென்றால் படித்துப்பாருங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக